தமிழ்நாட்டில் கடந்த நான்கரை ஆண்டுகளில் 65 வன வட்டாரங்கள் காப்புக் காடுகளாக அறிவிக்கை செய்யப்பட்டுள்ளன.
தமிழ்நாடானது காடுகள் மற்றும் காட்டு வளங்களின் மேலாண்மை, பேணல், பாதுகாப்பு மற்றும் பயன்பாட்டை நிர்வகிக்கும் பல சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளைக் கொண்டுள்ளது. இச்சட்டங்கள் காட்டின் சுற்றுச்சூழல் அமைவுகள், உயிர்ப்பன்மையம் மற்றும் கானுயிர்களைப் பேணுதல், மர அறுவடை, காடுகளில் கிடைக்கும் பிற பொருட்கள் சேகரிப்பு மற்றும் காட்டுப் பகுதிகளில் நில பயன்பாட்டு மாற்றம் போன்றவற்றை ஒழுங்குபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
இச்சட்டங்களில் முக்கியமானது தமிழ்நாடு வனச்சட்டம், 1882 ஆகும், இது தமிழ்நாட்டில் காடுகளை நிர்வகிக்கும் முதன்மைச் சட்டங்களில் ஒன்றாகும். காட்டு நிலங்களின் ஒழுங்குமுறை, காடுகளின் மேலாண்மை, சட்டவிரோத நடவடிக்கைகளிலிருந்து காடுகளைப் பாதுகாத்தல் மற்றும் காட்டுத்தீ தடுப்பு ஆகியவற்றைப் பற்றித் தெரிவிக்கிறது. காட்டின் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை தொடர்பான ஒழுங்குமுறைகளை அமல்படுத்த இச்சட்டம் வனத்துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்குகிறது.
இச்சட்டத்தின் பிரிவு 16 ன் கீழ் கடந்த நான்கரை ஆண்டுகளில் 65 வனப்பகுதிகள் காப்புக்காடுகளாக அறிவிக்கை செய்யப்பட்டுள்ளன. இதன் முலம் 7957.459 எக்டர் பரப்பிலான காடுகள் சட்டப் பாதுகாப்பைப் பெற்றுள்ளன.
– செய்திப் பிரிவு
Forest English